பொதுவாக முக்கியமான விழாக்காலங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அந்தவகையில் சென்னையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருவள்ளுவர் தினமான ஜன.16, வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான ஜன.25, குடியரசு தினமான ஜன .26 ஆகிய 3 தினங்களும், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஜன-16, 25, 26 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
Related Posts
அதிரவைத்த மர்மமரணம்: ஜெயக்குமாரின் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு…..!!!
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமார் உடற்கூறு ஆய்வில் எடுக்கப்பட்ட கல்லீரல், இரைப்பை, நுரையீரல்,…
Read more“ஹலோ சார்…. எனக்கு ஒரு டவுட்…” +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டு எண் வெளியீடு…!!
+2 மாணவர்களின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில் வழிகாட்டு எண்ணை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. இந்நிலையில் மாணவர்கள் விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது…
Read more