தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ள நிலையில் மாதாவரத்தில் உள்ள ஜெய் கோபால் அகர்வால் அகர்சன் கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி மற்றும் டிப்ளமோ உள்ளிட்ட கல்வி தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம். இந்த முகமூலம் 1500 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதில் பங்கேற்க உள்ளவர்கள் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.