சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 13 பள்ளிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று 13 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஒரே இமெயில் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.