நாடு முழுவதும் விரைவில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 34 சப் கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 29 தாசில்தார்கள் சப் கலெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனையடுத்து பல்வேறு துறைகளில் ஒரே இடத்தில் நீண்ட காலம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பதவி  உயர்வு மற்றும் இடமாற்றம் பெற்ற அதிகாரிகள் முக்கிய தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.