மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் ஏற்படும் தீ விபத்துக்கள் மிகவும் ஆபத்தானவை, ஏனெனில் இவை ‘தெர்மல் ரன்அவே’ எனப்படும் சங்கிலித் தொடர் வினையை உண்டாக்குகின்றன.
பெட்ரோல் வாகனங்களைப் போலன்றி, பேட்டரி தீ விபத்துகள் தங்களுக்குத் தேவையான ஆக்சிஜனைத் தாங்களே உருவாக்கிக் கொள்வதால், அவற்றை எளிதில் அணைக்க முடியாது; சில நேரங்களில் அணைக்கப்பட்ட சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகும் மீண்டும் தீப்பற்ற வாய்ப்புள்ளது.
இத்தகைய தீ விபத்துகளின் போது வெப்பநிலை 1,000°C-ஐத் தாண்டிச் செல்வதால், தீயணைப்பு வீரர்களுக்கு இதைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக அமைகிறது.
View this post on Instagram
“>
எனவே, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய சூழலில், இந்தத் தொழில்நுட்பத்தின் செயல்பாடுகளையும், அதிலுள்ள அபாயங்களையும் பொதுமக்கள் முழுமையாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.
