காட்டில் வலிமைக்கு மட்டுமே மதிப்பு உண்டு, கருணைக்கு அல்ல. வயதான காலத்தில் சிங்கம், புலி போன்ற வலிமையான விலங்குகள் கூட தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அப்படிப்பட்ட ஒரு வயதான சிறுத்தை ஒன்று ஆற்றைக் கடக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தள்ளாடும் வயதில், ஒவ்வொரு அடியையும் மிகவும் சிரமப்பட்டு எடுத்து வைத்து பாறைகளின் வழியே ஆற்றைக் கடக்க முயன்ற அந்தச் சிறுத்தையின் மீது, தண்ணீரில் மறைந்திருந்த ஒரு முதலை திடீரென பாய்ந்து தாக்கியது.

ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வயதான சிறுத்தை மின்னல் வேகத்தில் மிக உயரமாகத் தாவி, முதலையின் தாக்குதலிலிருந்து நூலிழையில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டது.

latestkruger’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த திகிலூட்டும் வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். நடக்கவே சிரமப்படும் ஒரு விலங்கால் எப்படி இவ்வளவு உயரமாகத் தாவ முடிந்தது என்று பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

சிறுத்தையின் வலிமையான தசைகள், வளைந்துகொடுக்கும் முதுகெலும்பு மற்றும் வலுவான பின்னங்கால்கள் ஆகியவையே இதற்குக் காரணமாகும். உடல் தளர்ந்தாலும், ஒரு வேட்டைக்கார விலங்கு தன்னை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒருபோதும் மறக்காது என்பதை இந்தச் சிறுத்தை நிரூபித்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Latest Sightings – Kruger (@latestkruger)

“>

இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், அந்த முதிய சிறுத்தையின் சுறுசுறுப்பைக் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.