தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாத அதிரடி மாற்றங்கள் நடந்து வருவதாகப் பொதுமக்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படையாகப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால ஆட்சியில் ஒரு பட்டா மாறுதல் செய்வதற்கே தான் அரசு அதிகாரிகளுக்கு மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை லஞ்சமாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்று அந்தப் பெண் தனது கசப்பான பழைய அனுபவத்தை அதில் விவரித்துள்ளார்.
Change is happening in Tamil Nadu n public praising @TVKVijayHQ 🔥🔥
"I have done work related to patta twice. The first time I got a patta, I personally spent around 3,000 to 4,000 rupees for that patta transfer—in the name of a bribe…
This was before this current… pic.twitter.com/RTL2O3YBVw— Iʀsʜᴀᴅ (@irshad5005) June 25, 2026
ஆனால், தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான டிவிகே (TVK) ஆட்சி அமைந்த பிறகு, தனக்கு மீண்டும் ஒரு சொத்துப் பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாறுதல் வேலை இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பழையபடியே அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் எதிர்பார்ப்பார்கள் என்று நினைத்துக் பயந்திருந்த வேளையில், இந்த முறை தான் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல், மிக நேர்மையான முறையில் பட்டா மாறுதல் தனது பெயருக்கு உடனே மாறி வந்ததாக அந்தப் பெண் மிகவும் நெகிழ்ச்சியோடும் வியப்போடும் தெரிவித்துள்ளார். தற்போதைய டிவிகே ஆட்சியில் ஏற்பட்டுள்ள இந்த வெளிப்படையான, நேர்மையான நிர்வாக மாற்றத்தை அந்தப் பெண் பாராட்டிப் பேசியுள்ள வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
