முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை கூடுதல்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை 31 வது முறையாக நீட்டித்தது சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி டி.வி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டவழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி.