சூடானில்  உள்நாட்டு போரால் ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அங்கு மொத்தம் 80 தமிழர்கள் சிக்கி உள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவி செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களை, அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சூடானில் உள்ள தமிழ் சங்கங்கள் மூலம் உணவு, இருப்பிடம் ஏற்பாடு செய்யப்படுள்ளது. அவர்கள் 9600023645 என்ற எண்ணில் அரசை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.