12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் 12 தொழிற்சங்கங்கள் மே 12ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருக்கின்றன. அன்றைய தினம் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் வேலைநிறுத்தம் செய்ய இருப்பதால் தமிழகம் முழுவதும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொழிலாளர் வேலை நேர திருத்த சட்டத்தை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளருக்கு 12 மணி நேர வேலை என அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. தொழிலாளர் பணி நேர மாற்றத்தால் உற்பத்தியும் தமிழக பொருளாதாரமும் உயரும்’ என்றார். விக்கிரமராஜா, திமுக MLA பிரபாகர்ராஜாவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.