கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கரூர், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சை, நீலகிரி, குமரி, நெல்லை, ராமநாடு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.