இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதே சமயம் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வருடமும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் வீடுகளில் ஏற்றப்படும் மூவர்ணக் கொடியின் புகைப்படத்தை  hargartiranga.com என்ற இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.