மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டில் எங்களை இந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடல என முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசியல் விமர்சகர்கள் , மக்கள் பிரதிநிதிகள் என பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நிர்மலா சீதாராமனுக்கு இயக்குனர் நவீன் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

“தமிழ்நாட்டில் எங்கள ஹிந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடல” என்று நிர்மலா சீதாராமன் கூறியதற்கு, “அனைத்து சாதியினரும் சமஸ்கிருதம் படித்து அர்ச்சகராகலாம் என்று முதலில் சட்டம் கொண்டுவந்தது தமிழ்நாடு தான். ஆனால் இந்தி கற்று பாஸ் ஆனாதான் தேர்ச்சி எனும் இந்தி திணிப்பைத் தமிழ்நாடு எதிர்க்கும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.