தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா ஜோதி. இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நிலையில் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். புஷ்ப ஜோதியின் மகன்களில் ஒருவர் CA (Chartered Accountant)தேர்வு சமீபத்தில் எழுத அதன் முடிவு வெளியாகி உள்ளது. அதில் புஷ்ப ஜோதியின் மகன் தோல்வியடைந்துள்ளார்.

இதனால் மகனின் எதிர்காலம் குறித்து தாய் மிகுந்த வேதனையில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த புஷ்பஜோதி மிகுந்த வேதனையின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் புஷ்பஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.