பப்ஜி என்னும் ஆன்லைன் விளையாட்டு செயலி  மூலம் இந்தியாவை சேர்ந்தவரை காதலித்த பாகிஸ்தான் பெண் சீமா சட்டத்திற்கு புறம்பாக எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்து தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சீமா, பப்ஜி காதலன் மற்றும் சீமாவின் நான்கு குழந்தைகளையும் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்தான். பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அவர்களுக்கு சீமா ஹைதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தானிடம் இருந்து வந்த மிரட்டல் அழைப்பு ஒன்றில் சீமா பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் 26/11 நடந்த தாக்குதலைப் போன்று மீண்டும் ஒரு தாக்குதலை மும்பையில் எதிர்பார்க்கலாம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.