பிரதமர் மோடி அவர்கள் பிரான்ஸ் நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபி நகரில் வைத்து துபாய் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசியுள்ளார்.

அந்நாட்டில் மோடி அவர்களை வரவேற்கும் விதமாக உலகப் புகழ் பெற்ற புர்ஜ் கலீபா கோபுரத்தில் இந்திய தேசியக்கொடி ஒளிர வைக்கப்பட்டதோடு பிரதமர் மோடியின் உருவப்படமும் அதனுடன் பிரதமர் மோடியை வரவேற்கிறோம் என்ற வாசகமும் ஒளிர வைக்கப்பட்டது.