சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும் நபர்களில் முக்கியமானவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான இவர் ட்விட்டரை வாங்கியதோடு தொழில்நுட்ப உலகத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறார். இவரது செயல்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் விமர்சனங்களை எழ செய்தாலும் தொழில்நுட்ப உலகில் புரட்சி செய்யும் நோக்கத்தில் தான் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.

 

இந்நிலையில் xAI எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை எலான் தொடங்கியுள்ளார். இது குறித்து எல்லாம் மஸ்க் கூறுகையில், டெஸ்லா மற்றும் ட்விட்டருடன் xAI செயற்கை நுண்ணறிவு நெருக்கமாக செயல்படும். அதோடு நாங்கள் X-Corp-ல் இருந்து தனித்துவமான நிறுவனமாக செயல்படுவோம்” என கூறியுள்ளார்.