இன்றைய சூழலில் உலக பணக்காரர்களில் மிக முக்கியமானவராக பார்க்கப்படுபவர் எலான் மஸ்க். இவர் Twitter நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். பல பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தியதோடு Twitter கணக்கில் ப்ளூடித் பெற கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

ட்விட்டரில் லாபத்தை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தாலும் தனது பணத்தை இழந்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் எதிர்மறையான பல பணப்புழக்கத்தில் தான் நாங்கள் இப்போது இருக்கிறோம். 50 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது. அதிக கடன் உள்ளது. இதனால் எனது பணம் ட்விட்டரில் இழந்து வருகிறது. நேர்மறையான பனப்பழக்கத்தை அடைய நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என கூறியுள்ளார்.