இந்தியாவில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானியத்துடன் சிலிண்டர் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 918 ரூபாய்க்கும் வணிக உபயோக சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேசமயம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 300 ரூபாயாக அது உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வீட்டு உபயோக சிலிண்டரை 300 ரூபாய் மானியத்துடன் சேர்த்து வெறும் 600 ரூபாய்க்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் சிலிண்டர் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.