திரிபுரா மாநிலத்தில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் பணி நேரத்தில் சீருடை அணிவதில்லை என்று புகார் எழுந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்கள் மற்றும் இதர பணியாளர்கள் என அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் சீருடை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு சிலர் மட்டுமே அதனை பின்பற்றப்படுவதில்லை எனவும் முறையான சீருடைகளை பின்பற்ற வலியுறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அனைவரும் தங்களுடைய அடையாள அட்டைகளை கட்டாயம் அணிய வேண்டும். ஒரு மாதத்தில் அரசு மருத்துவமனைகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவர் அதிகாரிகள் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை பின்பற்றாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.