இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலமாக அவ்வபோது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதனைப் போலவே போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு வரும் நிலையில் கடந்த மாதத்தில் மட்டும் 1,105 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 61 மருந்துகள் தரம் அற்றவையாக கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.