இன்றைய சமூகத்தில் ஆண்களுக்கு நேரும் அநீதிகளையும், சட்ட அமைப்புகளின் ஒருதலைப்பட்சமான பார்வைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக, ரஞ்சீஷ் என்ற 38 வயது பேருந்து நடத்துனரின் வாழ்க்கை ஒரு பெரும் துயரத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. தன் காதலி, மகள் என குடும்பத்திற்காகவே வாழ்ந்த ஒரு அப்பாவின் பாசம், இன்று சட்டத்தின் முன்னால் தோற்றுப் போய், அவரை தற்கொலை வரை தள்ளியிருப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது.
ரஞ்சீஷ், பேருந்து நடத்துனராகப் பணியாற்றி வந்தவர். தான் உயிருக்கு உயிராய் நேசித்த பெண்ணைத் திருமணம் செய்து, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையானார். ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது மனைவி ரஞ்சீஷையும் அவர்களது பிஞ்சு மகளையும் தவிக்கவிட்டுவிட்டு, வளைகுடா நாட்டிற்கு வேலைக்குச் சென்றார்.
அங்கு சென்ற இடத்தில் வேறொரு நபருடன் காதல் வயப்பட்ட அவர், தன் கணவனையும் குழந்தையையும் நிரந்தரமாகக் கைவிட்டார். அதன் பிறகு, கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக, ரஞ்சீஷ் தன் மகளை ஒரு தாயாகவும் தந்தையாகவும் இருந்து, அரும்பாடுபட்டு வளர்த்தார். தனது ஒட்டுமொத்த அன்பையும், நேரத்தையும், உழைப்பையும் மகளின் எதிர்காலத்திற்காகவே அர்ப்பணித்தார்.
ஆனால், விதியின் கொடுமையாக, பல வருடங்கள் கழித்து திடீரென வந்த அவரது முன்னாள் மனைவி, மகளின் சட்டப்பூர்வமான பாதுகாப்புரிமை (Custody) கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தன் கைகளால் வளர்த்த மகளை யாரிடமும் விட்டுத்தரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த ரஞ்சீஷ், நீதிமன்றத்தில் தன் முழு பலத்தையும் திரட்டிப் போராடினார். ஆனால், நீதிமன்றமோ அந்த 8 வருட பாசத்தைப் பார்க்காமல், குழந்தையின் கஸ்டடியை துரோகம் செய்து ஓடிப் போன தாய்க்கும், அவளது புதிய கணவனுக்கும் (சிறுமியின் வளர்ப்புத் தந்தை) வழங்கி உத்தரவிட்டது.
முதலில் தன் மனைவியை இழந்த ரஞ்சீஷ், தற்போது இந்தச் சட்ட அமைப்பால் தன் உயிரான மகளையும் பறி கொடுத்தார். ஒட்டுமொத்தமாக உடைந்துபோன அவர், தன் மகளைப் பிரிந்த ஏக்கத்தில், நீதி கிடைக்காத விரக்தியில் இறுதியாகத் தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
यह है रंजीश की कहानी।
वह 38 वर्ष का एक बस कंडक्टर था। उसने अपनी पसंद की लड़की से प्रेम विवाह किया और उनकी एक बेटी हुई।
दो साल बाद उसकी पत्नी उसे और उनकी बेटी को छोड़कर खाड़ी देश चली गई। वहाँ उसे एक दूसरा पुरुष मिला, उससे प्रेम हो गया और उसने रंजीश तथा अपनी बेटी—दोनों को छोड़… pic.twitter.com/EvRTSLCJ13
— Ajai Singh Yadav ( Il mostro) (@the_Atharva) July 18, 2026
இந்தச் சம்பவம், “ஆண்களின் உரிமைகளுக்கும், அவர்களின் பாசத்திற்கும் சட்டம் எப்போது சரியான முறையில் கதவைத் திறக்கும்?” என்ற மிக முக்கியமான கேள்வியை ஒட்டுமொத்த சமூகத்தின் முன்னும் எழுப்பியுள்ளது.
