டெல்லியில் 350 ரூபாய் பணத்திற்காக 17 வயது சிறுவனை 16 வயது சிறுவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற 17 வயது சிறுவனிடம் 16 வயது சிறுவன் பிரியாணி வாங்க 350 ரூபாய் பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் கத்தியால் 55 முறை குத்தி கொலை செய்துள்ளான். அது மட்டுமல்லாமல் சடலத்தை சாலை முழுவதும் இழுத்துச் சென்று அதன் முன்பு நடனமாடிய காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.