சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு, டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணி, ஜனவரி 7ஆம் தேதி மாலை 4.50 மணி, ஜனவரி 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாலை 4 மணி, ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே மறுமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் இதற்கான பயண சீட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சபரிமலை சீசன்…. கேரளாவுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. இன்று முதல் முன்பதிவு….!!!
Related Posts
2000 ஆபாச வீடியோக்கள்.. சிக்கும் பாஜக எம்.பி?…. பரபரப்பு…!!!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் தற்போதைய ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சுமார் 2000- க்கும் மேற்பட்ட ஆபாச…
Read moreமாணவர்கள் விசா பெற கடும் கட்டுப்பாடு… ஷாக் நியூஸ்…!!!
வெளிநாட்டினர் இந்திய திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி படிப்புகளில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி…
Read more