சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு, டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணி, ஜனவரி 7ஆம் தேதி மாலை 4.50 மணி, ஜனவரி 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாலை 4 மணி, ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே மறுமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் இதற்கான பயண சீட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.