சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு எட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிசம்பர் 8, ஜனவரி 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு, டிசம்பர் 24 மற்றும் 31 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணி, ஜனவரி 7ஆம் தேதி மாலை 4.50 மணி, ஜனவரி 10 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாலை 4 மணி, ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே மறுமார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் இதற்கான பயண சீட்டுகளை இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சபரிமலை சீசன்…. கேரளாவுக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. இன்று முதல் முன்பதிவு….!!!
Related Posts
கட்சித் தலைவர் பதவியில் இருந்து சிறிசேன திடீர் விலகல்…. அதிரடி அறிவிப்பு…!!
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். 2015-2019 வரை இலங்கை அதிபராக பதவி வகித்த சிறிசேன, சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், கட்சி செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தலைவர் பதவியில்…
Read moreமைனஸில் இருந்தாலும் அபராதம் தேவையில்லை…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு..!!!
பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்கை மூட விரும்பும் வாடிக்கையாளர்கள், அதற்காக அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்கின் இருப்பு மைனஸில் இருந்தாலும், அதற்காக அபராதம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனக் கூறியுள்ள RBI,…
Read more