பெண் சிங்கத்தின் பெயரை மாற்ற மேற்கு வங்கா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க விலங்கியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு சீதா என பெயரிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து வி.எச்.பி அமைப்பினர் வழக்கு தொடுத்தனர். இந்த பெயர் இந்து மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் உள்ளதாக மனுவில் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் சர்ச்சைகளை தவிர்க்க பெயரை மாற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.