கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை கடந்து மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் எரி சாராயம் ஏற்றி டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுனரான ராமலிங்கத்தை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியில் அவர் உயிரிழந்தார். மேலும் லாரி தீப்பிடித்து எரிந்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். சுமார் 4 மணி நேரம் கழித்து அங்கு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.