திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் ஐயப்பன் கோவில் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று காலை குழந்தை வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென வந்த மர்ம நபர் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருந்து செல்ல முயன்றார்.

உடனே குழந்தை அழுததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இதனால் குழந்தை இறக்கிவிட்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அதற்குள் அக்கம் பக்கத்தில் சுற்றி வளைத்து அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர் வேலூர் பகுதியைச் சேர்ந்த ஹஸ்பத் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.