கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கலிஸ்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லின்டோ டேவிட்(20) இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் லின்டோ டேவிட் தனது மோட்டார் சைக்கிளில் கருங்கல் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் கோரிக்கை வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக டேவிட் சடன் பிரேக் பிடித்தார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரம் நின்ற மின் கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று டேவிட்டின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.