ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி எங்கே இருக்கும் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கருப்புசாமி(41) என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி டிவி பார்ப்பதற்காக சென்று வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு டிவி பார்க்க சென்ற சிறுமியை கருப்புசாமி கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கருப்புசாமியை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் கருப்பசாமிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.