சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி ராணி அண்ணா நகரில் ஆனந்த சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை ஆனந்த சுரேஷ் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆனந்த சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்த சுரேஷ் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண் ஆனந்த சுரேஷுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் அவர் காதலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து நள்ளிரவு 1:30 மணி வரை செல்போனில் அந்த பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்த ஆனந்த சுரேஷ் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.