கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த 15ஆம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 10 நாட்களில் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.