இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

அப்போது பேசிய அவர் காசாவின் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதால் சர்வதேச ஆதரவை இழந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா செய்த தவறை இஸ்ரேல் செய்யக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.