கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இத்துறைமுகத்தின் அடுத்து அமைந்திருந்த வணிக வளாகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் வணிக வளாகம் சேதமடைந்துள்ளது.

ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.