கலைஞருக்கு பேனா சின்னம் மற்றும் நூலகம் கட்ட மட்டும் காசு இருக்கு, ஆனா சம்பளம் தர காசு இல்லையா? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  திமுக அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இடை நிலை ஆசிரியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், 2வது முறையாக கலந்துகொண்ட நாதக சீமான், கருணாநிதி, ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் வரை இந்த போராட்டம் தொடர்கிறது. திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையிலும் இதை குறிப்பிட்டது. நிதிநிலை சரி இல்லையென்றால் சமாதி கட்ட, பேனா வைப்பதற்கெல்லாம் பணம் எப்படி வந்தது என கேள்வியெழுப்பினார்.