தமிழகத்தில் குரூப் 2 உட்பட போட்டி தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான உத்தேச கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 2 பதவிகளில் 5,446 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பிரதான தேர்வு இந்த வருடம் பிப்ரவரியில் நடந்த நிலையில் இதன் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர் பணியில் 852 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜூலை மாதம் நடந்த நிலையில் இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. குடிமையியல் நீதிமன்ற நீதிபதி பதவிக்கான 245 காலி பணியிடங்களுக்கான தேர்வு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் இந்த முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட உள்ளதாகவும் இவ்வாறு 14 வகை போட்டி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.