கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த தேர்வு மையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் பொது அறிவு தாள் தேர்வை அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது தேர்வு அறையில் இருந்து சத்தம் கேட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர்களை சோதனை செய்தனர்.

அப்போது ஒரு வாலிபர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் சினிமா பட பாணியில் முக கவசத்தில் வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டர் என்னும் கருவியை பொருத்தி வெளியில் இருந்து தகவலை கேட்டு எழுதியதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சியூரை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. அவரது உறவினர் ராஜவேல் வெளியில் இருந்து செல்போன் மூலம் தேர்வு எழுதுவதற்கு உதவி செய்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்து சிறிய அளவிலான வாய்ஸ் ட்ரான்ஸ்மீட்டரை பறிமுதல் செய்தனர்.