சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானபட்டியில் வல்லவராய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வல்லவராஜ் அவரது சகோதரர் தர்மராஜ், நண்பர் குமார் இணைந்து அரியலூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது வீட்டில் பூஜை செய்து செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வல்லவராஜ் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தர்மராஜ் குமார் ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்தது. கடந்த 24-ஆம் தேதி அன்று வழக்கு விசாரணைக்காக வல்லவராஜ் அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது வல்லவராஜ் தான் ஆக்சா பிளேடு பாகங்கள் மற்றும் கண்ணாடி துண்டுகளை விழுங்கி விட்டதாக தெரிவித்தார். இதனால் உடனடியாக அவரை அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது வயிற்றில் இரும்பு துண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக வல்லவராஜ் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது.