அரியலூர் மாவட்டத்தில் உள்ள சவுர்வெளி கிராமத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குமரேசன் 18 வயதுடைய நர்சிங் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் உனது தாய், தந்தையை கொலை செய்து விடுவேன் என குமரேசன் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது அவர் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் குமரேசனை கைது செய்தனர்.