அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தில் விவசாய கூலி தொழிலாளியான காந்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என காந்தி மிரட்டியுள்ளார். இதனையடுத்து உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஜெயங்கொண்டம் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் காந்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.