பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பட்டணம் குறிச்சியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணிவேல் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி சிறுகளத்தூரை சேர்ந்த இளவரசன் என்பவரிடம் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். இதே போல பார்வதி, பிரியா, ராமச்சந்திரன் உள்ளிட்ட 12 பேரிடம் வீட்டு கடன் வாங்கி தருவதாக கூறி 40 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை வாங்கியுள்ளார்.

அப்படி மொத்தமாக மணிவேல் 10 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு கூறியபடி கடன் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான மணிவேலை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.