கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து தாசில்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆய்வு செய்த அரசு அதிகாரி…. பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
காரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!
இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…
Read moreBreaking: தமிழகத்தை உலுக்கிய லாக் அப் மரணம்… மாற்றுத்திறனாளி சபரி வர்மன் வழக்கை சிபிசிஐடி மாற்றி அதிரடி உத்தரவு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் விசாரணையை CBCID பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…
Read more