கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசுக்கு சொந்தமான பொது பாதையில் தடுப்பு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கடவூர் தாசில்தார் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது கிருஷ்ணன் தாசில்தாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதுகுறித்து தாசில்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கிருஷ்ணன் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.