தமிழகத்தில் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டியது என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ளஅவர், பாபரும், அவுரங்கசீப் உள்ளிட்ட முகல் அரசர்களின் கொடுங்கோன்மை, அதனை எதிர்கொண்ட சனாதன தர்மத்தை ஒழிக்க யாராலும் முடியாது. அவர்களாலேயே முடியாத ஒன்றையா இந்த அரசியல் ஒட்டுண்ணிகள் செய்யப்போகிறார்கள்என்றும்  சனாதன தர்மத்தை அழித்து ஒழிக்க நினைப்பவர்கள் அசிங்கப்பட்டு நிற்பார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.