விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்மையார் பட்டியை சேர்ந்த ஓட்டக்காரன்(56) என்பது தெரியவந்தது. இவர் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் ஓட்டக்காரன் அப்பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஓட்டக்காரனை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. சத்துணவு ஊழியரை கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“இரவு நேரத்தில் வழிமறித்து அரங்கேறிய கொடூரம்!”.. புதுக்கோட்டை கைதிகள் மீது பாய்ந்த அதிரடி தண்டனை.. பொதுமக்கள் வரவேற்பு..!!!
புதுக்கோட்டை அருகே கடந்த மே 17-ஆம் தேதி வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, வழிமறித்துப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. இந்த மனிதநேயமற்ற காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டு ஏற்கனவே காவல்துறையினரால்…
Read more“கோவை சிறுமி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”… கைதான இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்.. போக்சோ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!!!
கோவையில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் ஒட்டுமொத்த தமிழகமே நீதி கேட்டுப் போராடி வரும் நிலையில், இந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான புதிய அதிரடி உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது…
Read more