தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையில் ஆராய்ச்சி படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலையில் 2021-22 ஆம் கல்வியாண்டில் சட்ட ஆராய்ச்சியை ஊக்குவிக்க 132 மாணவர்கள் ஆராய்ச்சி துறையில் அனுமதிக்கப்பட்டனர். வரும் கல்வி ஆண்டில் ஆராய்ச்சி படிப்பில் 96 காலியிடங்களுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.