வரன்முறை திட்டத்தின் கீழ் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் மனை பிரிவுகளை வரன்முறை படுத்த அவகாசம் பிப்ரவரி 29ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு இன்றுக்குள் www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவே இறுதி வாய்ப்பு என்றும் அதன் பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.