சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் நடைபெறுவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தேர்வு மற்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதால் வழக்கம் போல அனைத்து பள்ளிகளும்  இயங்கும் என அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.