முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி மற்றும் கோகுல இந்திரா பாஜகவில் இணைய உள்ளதாக செய்தி பரவியது. இது குறித்து பேசிய கோகுல இந்திரா, நானும் ராஜேந்திர பாலாஜியும் பாஜகவில் இணைய போவதாக தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் ராணியாகவும் ராஜாவாகவும் இருக்கும் பொழுது நாங்கள் எதற்காக வேறு கட்சிக்குச் செல்ல வேண்டும். அதிமுகவில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம் என தெரிவித்துள்ளார்.