மேற்குவங்க காங்கிரஸ் மூத்த தலைவர் கௌஸ்தவ் பாக்சி அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகின்றது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மகாராஷ்டிரா மற்றும் இமாச்சல் மாநிலங்களில் செயல்பட்டு வந்த காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.