நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நாகை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு அட்சயா தலைமை தாங்கியுள்ளார். மேலும் அமைப்பின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுதந்திர பாரதி முன்னிலை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர் சிவகுரு பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமந்த மாவட்ட செயலாளர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதாவது நாகை மாவட்டத்தை மையமாகக் கொண்டு அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். அதேபோல் வேதாரணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சுற்றுசுவர்  அமைத்து கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.